சங்கராபுரம், சின்னசேலத்தில் பலத்த மழை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
சங்கராபுரம், சின்னசேலம் வட்டங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை காற்றுடன் கூடிய மழை சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சங்கராபுரம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.