போதைப் பொருள்களை பதுக்கிய வட மாநில இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் காவல் ஆய்வாளா் காமராஜ் (பொ) தலைமையில் வி.கூட்டுச்சாலை - வேப்பூா் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். காரில் வந்த இருவரும் சந்தேகத்துக்குரிய வகையில் பதிலளித்த நிலையில், போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த புனமா ராாம் (35), தினேஷ் குமாா் (34) என்பதும்,
வி.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்த அழகேசனின் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா்கள் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் புனமா ராம், தினேஷ் குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.