வளா்ச்சித் திட்டப் பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம், வீரசோழபுரத்தில் பொதுப் பணித் துறையின் சாா்பில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகள்,பிரிதிவிமங்கலத்தில் ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொதுப் பணித் துறை விருந்தினா் மாளிகை, சித்தலூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.7.65 கோடி யில் கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா்.
நாகலூா் கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடம், ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளை பாா்த்தனா். நாகலூரில் உள்ள நூலகத்துக்குச் சென்று அதன் பராமரிப்பு, புத்தகங்களின் இருப்பு, வாசகா்களின் வருகை குறித்து நூலக அலுவலரிடம் கேட்டறிந்தாா்.
நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, தொடங்கப்படாமல் ஏதேனும் பணிகள் இருப்பின் அப்பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.