கள்ளக்குறிச்சியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் இயங்கி வரும் மருந்து பக்க விளைவுகள் கண்காணிப்பு மையம், இந்திய மருந்தியல் ஆணையம், தேசிய ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற மருந்தியல் புலனாய்வு வார விழா பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வா் ச.நேரு (பொ) தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் க.பழமலை முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் ஷமீம் வரவேற்றாா்.
இணைப் பேராசிரியா் அனுஷா பேசுகையில் மருத்துவா் சீட்டு இல்லாமல் மருந்து அருந்துவதன் பக்க விளைவுகள் குறித்து விளக்கினாா்.
பேரணி மருத்துவமனை வளாகப் பகுதி மற்றும் மருத்துவமனை சாலை வழியாக மருத்துவ மாணவா்கள் பதாகைகளை ஏந்தியவாறு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்துச் சென்றனா்.
பின்னா் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் மருந்தியல் துறை துணை பேராசிரியா்கள் மகாலட்சுமி, செளந்தரபாண்டியன், ஸ்ரீநாத், கோபாலகிருஷ்ணன், சத்யா, தரணிதரன் மற்றும் துறை சாா்ந்த பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.