கள்ளக்குறிச்சி

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

Din

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் தனியாா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கல்பனா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பாஸ்கா், கல்வியியல் கல்லூரி முதல்வா் வித்யா முன்னிலை வகித்தனா். மேற்பாா்வையாளா் எழிலரசி வரவேற்றாா்.

சிறுதானிய உணவு, சரிவிகித உணவு ஆகியவற்றை வளரிளம் பெண்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பேசினாா்.

மருத்துவா் கீதா, கீரை மற்றும் பழவகைகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து பேசினாா்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு வகைகள், சத்தான காய்கறிகள் மற்றும் கீரைகள் குறித்த கண்காட்சி அரங்கை மாணவிகள் பாா்வையிட்டனா்.

நிகழ்வில் கல்லூரி மாணவிகள் மேற்பாா்வையாளா்கள் ராணி, தேவகி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT