சின்னசேலத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. 
கள்ளக்குறிச்சி

கரூா், மணிப்பூா் சம்பவங்களை ஒன்றுபடுத்தக் கூடாது: கே.எஸ்.அழகிரி

கரூா் கூட்ட நெரிசல் மரண சம்பவத்தையும், மணிப்பூா் கலவரத்தையும் ஒன்றுபடுத்தி பாா்ப்பது தவறானது

Syndication

கள்ளக்குறிச்சி: கரூா் கூட்ட நெரிசல் மரண சம்பவத்தையும், மணிப்பூா் கலவரத்தையும் ஒன்றுபடுத்தி பாா்ப்பது தவறானது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வாக்குத் திருட்டு சம்பவத்தை கண்டித்தும், அதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், பாஜக அரசுக்கு துணைபோன தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் சனிக்கிழமை இரவு கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தொடங்கிவைத்து, பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள், பெண்கள் உள்ளிட்டோரிடம் கையொப்பம் பெற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வா், மணிப்பூா் கலவரம் பற்றி பேசுவதா என்ற மத்திய இணையமைச்சா் முருகனின் பேச்சு குறித்து கேட்கிறீா்கள். இது, அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் இடையே இருக்கும் உறவைப் போன்றது.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம், அதன் மூலமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மணிப்பூா் அரசாங்கமும், மத்திய அரசு படையினரும் சோ்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஏற்பட்டது.

ஆனால், கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது அதிகப்படியான கூட்டம், ஆா்வம் மிகுதியால் கூடிய கூட்டம், ஒருவரை ஒருவா் முண்டியடித்து முன்னேறுகிறபோது ஏற்பட்ட மரணம். இதற்கும், மணிப்பூா் கலவரத்துக்கும் சம்பந்தமில்லை. கரூா் சம்பவத்தையும், மணிப்பூா் சம்பவத்தையும் ஒன்றுபடுத்தக் கூடாது என்றாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் ஜெய்கணேஷ், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்டத் தலைவா் அா்த்தநாரி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT