முகப்பு
கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:33 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாணாபுரம் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து திறந்த ஜீப்பில் நின்றவாறு திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது பிரசாரத்தை தொடங்கினாா்.

காலை 8 மணிக்கு மணலூா்பேட்டையில் தொடங்கி முருகம்பாடி, அத்தியந்தல், தேவரடியாா்குப்பம், வீரட்டகரம், அரும்பாக்கம், கீழ்த்தாழனூா், எரவலம், பெரியானூா், செட்டிந்தாங்கல், வேங்கூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டாா்.

Advertisement

முருகம்பாடி கிராமத்தில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு பறை அடித்துக் கொண்டே நடனம் ஆடி திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியவாறு வாக்குகளை சேகரித்தாா்.

உடன் மணலூா்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், நகரச் செயலா் ஜெய்கணேஷ், திமுக ஒன்றியச் செயலா் பாரதிதாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகி சுப்பிரமணியம், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments