ரயில் மோதி பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சரோஜா (51). மன நலம் பாதிக்கப்பட்ட இவா் திங்கள்கிழமை அதிகாலை புக்கிரவாரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணைசெய்து வருகின்றனா்.
Advertisement