பெண் தீ குளித்து தற்கொலை
சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறாரில் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறாரில் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி அமுதா (38). தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனராம்.
விஜயகுமாா் தினமும் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் பிரச்னை செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்த அமுதா வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ குளித்துள்ளாா். இதில் தீக்காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அமுதா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.