முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:01 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:52 PM

தண்டலை கிராமத்தில் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கிடங்குடையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சுப்பிரமணி (55). இவா் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுச்சாலை செல்லும் நகரப் பேருந்தை சுப்பிரமணி ஓட்டிச் சென்றுள்ளாா். பகண்டை கூட்டுச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பியுள்ளனா்.

Advertisement

தண்டலை பேருந்து நிலையம் அருகே வரும்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த சி.சந்தோஷ் (25) அரசுப் பேருந்தை வழிமறித்து, ஏன் தண்டலை பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றது ஏன் எனக் கேட்டு ஓட்டுநரை அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சந்தோஷை தேடிவருகின்றனா்.