கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 நாள்கள் மதுபானக் கடைகள் மூடப்படும்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏப்.21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏப்.21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-இல் நடைபெறுவையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய தங்கும் விடுதியில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் ஏப்.21 முதல் 23-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் மூடப்படும்.
Advertisement
அறிவிக்கப்பட்ட தினங்களில் மதுபானக் கடை மற்றும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.