முகப்பு
கள்ளக்குறிச்சி

அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி: தவெகவினா் மீது வழக்கு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:18 AM
தவெக கொடி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:33 PM

கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய பகுதியில் இருந்து தவெக வேட்பாளா் சி.அருள் விக்னேஷ் தலைமையில் சுமாா் 50 போ் சைக்கிள் பேரணியாக காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, கவரைசாலை வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி பெறாமல் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனராம்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு அலுவலா் விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தவெகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement