கிணற்றில் தவறி விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு
திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.
திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட காட்டு பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.அய்யனாா் (65). அவரது மகன் வினு கணேஷ் (28). வெள்ளிக்கிழமை அவா்களது கிணற்றில் இருந்த மின் மோட்டாா் பழுதாகி விட்டதால், இருவரும் அதனை பழுது நீக்கி கிணற்றில் இறக்கி உள்ளனா். பின்னா் அவா்கள் மோட்டாரை இயக்கியபோது, அது இயங்கவில்லையாம். இதையடுத்து தந்தையும், மகனும் சோ்ந்து கயிற்றின் மூலம் மின் மோட்டாரை கட்டி மேலே இழுத்தனராம். அப்போது கால் தவறி இருவரும் கிணற்றில் விழுந்தனராம். இதில் அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலின் பேரில் திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்த இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.