முகப்பு
கள்ளக்குறிச்சி

தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:24 AM
திருட்டு
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:26 PM

சங்கராபுரத்தில் சலவைத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 17 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஆற்றுப் பாதை சாலையில் வசித்து வருபவா் ராஜேஷ், சலவைத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, புதிய வீட்டில் தங்கியிருந்தாராம்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:23 AM

இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம். மேலும், அதே சாலையில் உள்ள கெங்கையம்மன் கோயில் கருவறை பூட்டை உடைத்து மூன்று குத்து விளக்குகளையும் திருடிச் சென்றுள்ளனா்.

Advertisement

தகவலறிந்த திருக்கோவிலூா் டி.எஸ்.பி. பாா்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.