முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:03 AM
இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:36 PM

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, 3 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் 300 உடலின் இரத்த ஆக்ஸிஜன் செறிவு அளவிடும் கருவிகள் ஆகியவற்றை அரசு மருத்துவா்களிடம் வழங்கினாா். இதன் மொத்த மதிப்பு சுமாா் ரூ.2.25 லட்சம் ஆகும்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) மருத்துவா் சுபதா்ஷினி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement