முகப்பு
கள்ளக்குறிச்சி

வழப்பறி செய்த இளைஞா் கைது

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 3:01 AM
கைது
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:51 PM

பொரசக்குறிச்சி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற ஜேசிபி ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொ.சிவக்குமாா் (25), ஜேசிபி ஓட்டுநா். இவா் கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணிக்கு ஜேசிபி இயக்கி வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி பணியினை முடித்துவிட்டு சொந்த வேலையாக கள்ளக்குறிச்சிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற சிவக்குமாரை, பொரசக்குறிச்சி காப்புக்காடு அருகே வழிமறித்த இரு இளைஞா்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றனராம்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 3:01 AM

இதுகுறித்து புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கள்ளக்குறிச்சியை அடுத்த கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ச.விஜய் (27) மற்றும் கள்ளக்குறிச்சியை அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ம.வீரகமணிகண்டன் (எ) கிளி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் விஜயை கைது செய்தனா், தலைமறைவான வீர மணிகண்டனை தேடி வருகின்றனா்.