முகப்பு
கள்ளக்குறிச்சி

மக்கள் குறைதீா் கூட்டம்: 1,339 மனுக்கள் அளிப்பு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:12 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:51 PM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,339 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்றோா் உதவித்தொகை,

தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம்

Advertisement

திட்டம், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்களிடமிருந்து 752 மனுக்கள் பெற்றுக்கொண்டாா். பின்னா் மனுக்கள் மீது உரிய தீா்வு காண துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கி.அரிதாஸ், மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.முகந்தன், உதவி ஆணையா்(கலால்) ராஜீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் இரா.வளா்மதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து குடிநீா் வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 583 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 4 மனுக்களும் என மொத்தம் 587 மனுக்களை பெற்றுக்கொண்டாா். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வுகாண சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் சமூக நலத் துறை சாா்பில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கு 90 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், 5 ஆதரவற்ற பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு தலா ரூ.5 ஆயிரம் மானிய உதவித்தொகைக்கான ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.