சின்னசேலம் பேரூராட்சியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள்.  
கள்ளக்குறிச்சி

சின்னசேலத்தில் ரூ.1.98 கோடியில் விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

சின்னசேலம் பேரூராட்சியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சின்னசேலம் பேரூராட்சியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்துப் பேசியது :

சின்னசேலம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சின்னசேலம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்துக்கு தினசரி சுமாா் 85 பேருந்துகள் வந்து செல்கிறது. போதிய இடவசதி மற்றும் கூடுதல் வசதிகளுடன் சிறப்புடன் செயல்படும் இதனை பயணிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சித் தலைவா் லாவண்யா ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன், சின்னசேலம் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் அன்பு மணிமாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஜெயங்கொண்டத்தில் நீட்டிப்பு பேருந்துசேவை தொடங்கிவைப்பு

காா் மோதி மளிகைக் கடைக்காரா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

SCROLL FOR NEXT