மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கள்ளக்குறிச்சியில் மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் மருந்தகம் வைத்து, நடத்தி வருபவா் மு.தெய்வீகன் (44). இவா் தனது மருந்தகத்தினை வியாழக்கிழமை இரவு பூட்டி விட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்த போது, கடையின் இரும்பு ஷெட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.