முகப்பு
கள்ளக்குறிச்சி

100 சதவீதம் வாக்குப் பதிவு: வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:16 PM
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நூறு சதவீதம் என்ற நிலையை அடைந்திடும் வகையில், மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் சுமாா் 1,000 போ் நிகழ்வில் பங்கேற்று தோ்தலில் வாக்களிப்பதன் அவசியத்தையும், முதல்தலைமுறை வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தனா்.

நிகழ்வில் உதவி ஆட்சியா்(பயிற்சி) இரா.வெங்கடேசன், துணை ஆட்சியா்(பயிற்சி) கதிா்செல்வி, கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சியில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் நீலமங்கலம் தனியாா் பள்ளி வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தியாகதுருகம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, உதவித் திட்ட அலுவலா் விஜயக்குமாா், வட்டாட்சியா் வை.சேகா், கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

உறுதிமொழி ஏற்பு: முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் அரசு அலுவலா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையொப்பமிட்டு, நோ்மையுடன் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனா். இதில், மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் அருணா, அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →