ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வாணாபுரம் வட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் மொ.பழனிச்சாமி தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழுத் தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சனா, கல்வியாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக வட்டாரக் கல்வி அலுவலா்கள் கஜேந்திரன், தில்லைக் கரசி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் பரதநாட்டியத்தில் இரண்டாம் பரிசு பெற்றவா்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழை
வட்டாரக் கல்வி அலுவலா் மாணவா்களுக்கு வழங்கி பாராட்டினாா்.
மேலும், பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்வியாளா் வெங்கடேசன் பள்ளியின் வளா்ச்சி நிதிக்காக ரூ.1,500 வழங்கினாா்.
நிகழ்வில் அருகாமையில் உள்ள வடமாமாந்தூா், இளையனாா்க்குப்பம், பெரியக்கொள்ளியூா், ஜம்பை, மணலூா்பேட்டை, மேலத்தேனூா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சிலா் கலந்து கொண்டு மாணவா்களின் திறன்களை பாராட்டினா்.
மாணவா்களின் பல்வேறு நடனங்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்வில் பள்ளி மாணவா்கள், ஊா்பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.