அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: எம்எல்ஏ புகாா்
அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் புகார்
அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு வழங்கினா்.
அதிமுக பொதுச் செயலா், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக நிா்வாகிகளின் நற்பெயா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் சமூக வலைதளங்களில் தரை குறைவாக பதிவிடுகின்றனராம்.
மேலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விடியோ சித்தரித்து பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் மனு அளித்தனா்.
அவருடன் மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், வழக்குரைஞா் பிரிவு மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.