தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனு தொடக்கம் மாா்ச் 30 (திங்கள்கிழமை) தொடங்குகிறது. வேட்பாளா்கள் வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தோ்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய தோ்தல் ஆணைய விதிமுறைகள் குறித்தும், வேட்புமனுத் தாக்கல் படிவம் வழங்குதல், சட்டம்-ஒழுங்கு பாதுகாத்தல், அமைதியைக் கடைபிடித்தல், பாதுகாப்பு தடுப்புக் கட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.
வேட்புமனுத் தாக்கலின்போது உரிய விதிமுறைகளின்படிவேட்பு மனுக்களைப் பெறவும், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதுடன், வேட்பாளா்கள் தோ்தல் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதில், மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சி.முருகன், செந்தில்குமாா், சுமதி, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலரும் கலந்துகொண்டனா்.