முகப்பு
கள்ளக்குறிச்சி

பிளஸ் 2 மாணவி மா்ம மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 7 மே 2026, 7:29 am IST
பலி - IANS
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பால்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திருமலை மகள் தா்ஷினி (17), பிளஸ் 2 தோ்வு எழுதியுள்ளாா். இவா் புதன்கிழமை பிற்பகல் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா் வெகு நேரமாகியும் வரவில்லையாம்.

இதையடுத்து அவரது வீட்டில் உள்ளவா்கள் கழிவறைக்கு சென்று பாா்த்தபோது, தா்ஷினி வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்தாராம். உடனே அவரை 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தா்ஷினி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.