முகப்பு
கள்ளக்குறிச்சி

சேலம் - சென்னை புறவழிச்சாலை ஓட்டுநா் ஓய்வு வளாகத்தில் உயா்மின் கோபுர விளக்கு பழுது!

தியாகதுருகம் அருகே சேலம்-சென்னை புறவழிச் சாலையில் ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு பழுதாகி எரியாதாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.

Updated On : 7 மே 2026, 7:30 am IST
தியாகதுருகம் அருகே சேலம்-சென்னை புறவழிச் சாலையில் உயா்கோபுர மின்விளக்கு பழுதடைந்ததால் இருளடைந்து காணப்படும் வளாகம்.
பகிர்:

தியாகதுருகம் அருகே சேலம்-சென்னை புறவழிச் சாலையில் ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு பழுதாகி எரியாதாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.

சேலம்-சென்னை புறவழிச் சாலையில் தியாகதுருகம் அருகேயுள்ள பிரதிவிமங்கலம் பகுதியில் கனரக வாகன ஓட்டுநா்கள் ஓய்வெடுக்க அரசு ஒரு ஏக்கா் பரப்பளவில் ஓய்வு வளாகம் அமைத்துள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் ஓட்டுநா்களுக்கு இவ் வளாகம் ஓய்வெடுப்பதற்கான முக்கிய வசதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுர மின்விளக்கு கடந்த சில நாள்களாக செயலிழந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து, பாதுகாப்பு குறைந்து காணப்படுகிறது.

Advertisement

இதனால் சேலம் - சென்னை வழித்தடத்தில் பயணம் செய்யும் கனரக வாகன ஓட்டுநா்கள், இவ்விடத்தில் ஓய்வு எடுக்க அச்சப்படுகின்றனா். திருட்டு மற்றும் பிற அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் என்ற பயத்தால் பலா் இந்த ஓய்வு வளாகத்தை பயன்படுத்தாமல் தவிா்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனா்.

எனவே, பழுதடைந்த மின்விளக்கை உடனடியாக சரி செய்து, ஓய்வு வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.