முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்: 84 போ் கைது

கள்ளக்குறிச்சியில் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

Updated On : 9 மே 2026, 3:01 am IST
~
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட 84 காங்கிரஸ் நிா்வாகிகளை போலிஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ந.தனபால், பி.பி.எஸ்.இளையராஜா, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் கே.என்.ஆா்.என்.குமாா் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் சு.தேவராஜ், எம்.ஆா்.கே.இளையபெருமாள், முத்தமிழ் கண்ணன், வட்டார தலைவா்கள் எஸ்.சரண்ராஜ், சே.பிரபு, டி.கணேசன், அ.நாராயணன், இரா.துரைமுருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

Advertisement

பின்னா் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை கள்ளக்குறிச்சி போலிஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.