முகப்பு
கள்ளக்குறிச்சி

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 24 மே 2026, 1:07 am IST
தற்கொலை
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அருள் மகன் ராஜா (17). இவா் நெல் அறுவடை இயந்திர உதவியாளராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜா, வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.