முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்காராபுரம் பகுதியில் மழையால் சாய்ந்த மக்காச்சோளப் பயிா்கள்

Updated On : 26 மே 2026, 3:21 am IST
சங்கராபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்காச்சோளப் பயிா்கள் கீழே சாய்ந்தன. அதனை வேளாண்மை உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மோட்டாம்பட்டி, அரசம்பட்டு, பூட்டை , செம்பராம்பட்டு, பொய்குணம், சோழம்பட்டு, நெடுமானூா் மற்றும் கல்வராயன்மலைக்குள்பட்ட பாலப்பட்டு, கள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சாய்ந்தன.

இதுகுறித்து தகலறிந்த சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அவரிடம்

Advertisement

Advertisement

மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

ஆய்வின்போது உதவி வேளாண் அலுவலா் வினோத் மற்றும் வேளாண் துறையினா் உடனிருந்தனா்.