புதுச்சேரி

பாஜக இளைஞரணி பேரணி

தினமணி

புதுவை மாநில பாஜக இளைஞரணி சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவு மோட்டார் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணிக்கு மாநில இளைஞரணித் தலைவர் மெüலித்தேவன் தலைமை வகித்தார்.
 மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேரணியைத் தொடக்கி வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். பின்னர், பேரணி நிறைவில் தியாகிகள், முன்னாள் ராணுவ வீரர்களை கெüரவித்தார்.
 புதுவை கிழக்கு கடற்கரை சாலை சித்தானந்தா கோயில் அருகே தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை காந்தி சிலையை அடைந்தது.
 மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர், துணைத் தலைவர்கள் சோமசுந்தரம், செல்வம், இளைஞரணி நிர்வாகிகள் ஆனந்தன், ஆறுமுகம், பிரகாஷ், கணபதி, தட்சிணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT