புதுச்சேரி ஏஐடியுசி லோடு கேரியர் தொழிலாளர் நலச் சங்கத்தின் புதிய கிளைத் தொடக்க விழா வில்லியனூர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க நிர்வாகிகள் பாலு, மாயகிருஷ்ணன், இளையராஜா கூட்டாக தலைமை வகித்தனர். மாநிலத் தலைவர் விஎஸ்.அபிஷேகம் சங்கக் கொடியேற்றினார். மாநில லோடு கேரியர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.சேதுசெல்வம் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார்.
மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், இளைஞர் மன்றச் செயலர் அந்தோணி, வில்லியனூர் தொகுதிச் செயலர் கணேசன், லோடு கேரியர் சங்கத்தின் செயலர் செந்தில்முருகன், பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.