புதுச்சேரி மரப்பாலம், வெங்கட்டா நகர் துணைமின் நிலையங்களில் உயர் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், புதன்கிழமை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்.
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை: சித்தன்குடி, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரதி நகர், நேரு நகர், வள்ளலார் சாலை, கண்டாக்டர் தோட்டம், புது நகர், குபேர் நகர், கோவிந்த சாலை.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை: தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர், வெள்ளவாரி வீதி, செயிண்ட் சீமோன்பேட், அணைக்கரை மேடு, கென்னடி கார்டன், சாமிப்பிள்ளைத் தோட்டம், முத்தியால்பேட்டை.