தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.
நாடு முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமைச் செயலர் மனோஜ் பரிதா தலைமையில் தலைமைச் செயலக ஊழியர்கள் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல, அனைத்து அரசுத் துறைகளிலும் அரசு ஊழியர்கள் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.