தாய்லாந்தில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் புதுவை அணியினருக்கு இரா. சிவா எம்எல்ஏ சனிக்கிழமை சீருடை வழங்கி, வழியனுப்பி வைத்தார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சாப்ட்பால் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்க புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் ஸ்டீபன்ராஜ் தலைமையிலான அணி செல்கிறது. இதேபோல, சென்னை சத்தியபாமா பல்கலை.யில் நடைபெறும் தென்மண்டல கபடிப் போட்டியில் வினோத்
குமார் தலைமையிலான புதுச்சேரி பல்கலைக்கழக அணியினர் பங்கேற்கின்றனர்.
தாய்லாந்து மற்றும் சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ. சீருடை வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
லப்போர்த் வீதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதிச் செயலாளர் சக்திவேல், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மாணவர் அணி நிர்வாகிகள் பேரிஸ் இளங்கோ, தயாநிதி, எழிலன், யோகேஷ் உள்பட வர்த்தகர் அணி அமைப்பாளர் சக்திவேல், திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர் என பலர் பங்கேற்றனர்.