புதுச்சேரி

குடும்பக் கட்டுப்பாடு சிசிச்சை விழிப்புணர்வு

DIN

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை விழிப்புணர்வு பிரசார ஊர்தி காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு நலவழித் துறை மூலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நவ. 21 முதல் டிச. 4 வரை ஆண்களுக்கான நவீன எளிய முறை குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஊர்தி, மாவட்ட ஆட்சியரக வாயிலில் இயக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கொடியசைத்து இயக்கிவைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி, தொழில்நுட்ப உதவியாளர் சேகர், தேவராஜ், சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT