புதுச்சேரி

திருட்டுச் சம்பவங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்திய திமுக எம்.எல்.ஏ. 

தினமணி

பொது இடங்களில் திருட்டுச் சம்பவங்களை கண்காணிக்க தனது சொந்த செலவில் உருளையான்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. இரா.சிவா கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்.
 புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட கண்டக்டர் தோட்டம், புதுநகர், குபேர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளிநபர்களால் அடிக்கடி தொந்தரவு ஏற்படுத்துவதுடன், சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. மேலும், அப்பகுதியில் இருசக்கர வாகன திருட்டுச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், இதை கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் சிவா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
 கோரிக்கையை ஏற்று கண்டக்டர் தோட்டம் குடியிருப்பு பகுதி, புதுநகர், குபேர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ. 1 லட்சம் மதிப்பில் தமது சொந்த செலவில் கண்காணிப்பு கேமரா அமைக்க அவர் ஏற்பாடு செய்தார். இந்த பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
 இதில் தொகுதி எம்.எல்.ஏ. சிவா கலந்துகொண்டு, கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள் கீர்த்தி, நாராயணசாமி, திமுக தொகுதிச் செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி அமைப்பாளர் தாமரைக்கண்ணன் மற்றும் கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT