ஹயக்ரீவர் கோயிலில் 11 நரசிம்மர்கள் திருவீதி உலா
புதுச்சேரி முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 11 நரசிம்மர்களின் திருவீதி உலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 11 நரசிம்மர்களின் திருவீதி உலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நரசிம்மர் ஜெயந்தியையொட்டி இந்தக் கோயிலில் சனிக்கிழமை காலை ஜ்வாலா நரசிம்மர், அஹோபில நரசிம்மர், பானக நரசிம்மர், வராஹ நரசிம்மர், பாவந நரசிம்மர், மாலோல நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், யோக நரசிம்மர், பார்கவ நரசிம்மர் உள்பட 11 நரசிம்மர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 11 நரசிம்மர்களுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 11 நரசிம்மர்கள் மங்களகிரி விமானத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மங்களகிரி தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட 11 நரசிம்மர்கள் திரு வீதி உலா சென்றனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.