புதுச்சேரி

விதவைகளுக்கு உதவித் தொகை வழங்க ஆணை

தினமணி

புதுச்சேரி மணவெளி தொகுதியில் விதவைகள் 198 பேருக்கு மாத உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
 மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் விதவைகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தவளக்குப்பம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 198 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.
 நிகழ்ச்சிக்கு அரசுக் கொறடா ஆனந்தராமன் தலைமை வகித்தார். துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT