அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள்: பெற்றோர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் அறிவுரை
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்துள்ளார்.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒளரங்கபாத்தில் இயங்கும் காலேஜ் ஆப் லைப் டெக்னாலஜி மற்றும் தில்லியைச் சேர்ந்த கவுன்சில் ஆப் ஹையர் செகண்டரி எஜூகேஷன் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாதவை என்றும், அவற்றுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்ற உததரவின்படி நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இத்தகைய கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்கும் முன்பு, அவை முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.