சர்வதேச தண்ணீர் தின விழா
புதுச்சேரி வேளாண் துறையின் நிலத்தடி நீர்ப் பிரிவு சார்பில் சர்வதேச தண்ணீர் தின விழா, தட்டாஞ்சாவடி வேளாண் அலுவலகத்தில் உள்ள விவசாயிகள் பயிற்சிக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வேளாண் துறையின் நிலத்தடி நீர்ப் பிரிவு சார்பில் சர்வதேச தண்ணீர் தின விழா, தட்டாஞ்சாவடி வேளாண் அலுவலகத்தில் உள்ள விவசாயிகள் பயிற்சிக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி தலைமை வகித்தார். கூடுதல் வேளாண் இயக்குநர் முருகேசன், நிலத்தடி நீர் அதிகார அமைப்பின் உறுப்பினர் செயலர் வெங்கட்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
வேளாண் அதிகாரிகள் பெத்தபெருமாள், ஜீவானந்தம், ரஹ்மான் ஆகியோர் நீர் சிக்கனம், மழைநீர் சேமிப்பு, நீர் மேலாண்மை பற்றி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
வேளாண் அதிகாரி பிரபாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
புவி வெப்பமயமாதல், நீர் சிக்கனம் குறித்த குறும்படங்கள் வெளியிடப்பட்டன. வேளாண் அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.
இதில் என்.எஸ்.எஸ். மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில நிலத்தடி நீர்ப் பிரிவு நீர் நிலவியலாளர் மனோகர் செய்திருந்தார்.