ரெட்டியார்பாளையம் கூட்டுறவு சங்கத் தேர்தல்: என்.ஆர்.காங். வேட்பாளர்கள் 9 பேரும் வெற்றி
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும் வெற்றி பெற்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும் வெற்றி பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ரெட்டியார்பாளையம் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழுவுக்கு 9 இயக்குநர்களைத் தேர்வு செய்ய தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களான பூ.பூபாலன், பி.ரகுபதி, எஸ்.பழனிவேல், ஏ.பூபேஷ், கே.சக்திவேல், ஆர்.அன்பழகன், ஐ.எலிசபெத், ஆர்.சிவனேஸ்வரி, ஆர்.லோகநாதன் ஆகிய 9 பேரும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.