முகப்பு
புதுச்சேரி

புரட்டாசி மாத விரதம் நிறைவு: அசைவம் விற்பனைக் கடைகளில் கூட்டம்

புரட்டாசி மாத விரதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அசைவம் விற்பனைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 10:03 AM
பகிர்:

புரட்டாசி மாத விரதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அசைவம் விற்பனைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு, பக்தர்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அப்போது அசைவ உணவை முழுமையாகத் தவிர்த்து விடுவர். 
இந்த நிலையில், புரட்டாசி மாதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அசைவக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அசைவ உணவுப் பிரியர்கள் புதுச்சேரி பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள், கோழிகள், ஆடுகள் உள்ளிற்றவற்றின் மாமிசத்தை வாங்க அலை மோதினர். மார்க்கெட்டில் ஆட்டுக் கறியின் விலை ரூ. 550-க்கு விற்பனையானது. விலையைப் பொருள்படுத்தாமல் பலரும் இதை வாங்கிச் சென்றனர். 
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, கடந்த ஒரு மாதமாகவே மீன், கோழிக் கறியின் விலை குறைவாக விற்கப்பட்டது. தற்போது வியாபாரம் சற்று சூடுபிடித்துள்ளததால், கடந்த மாதத்தை விட தற்போது வியாபாரம் அமோகமாக உள்ளது. பலரும் மீன், கோழி, ஆட்டுக் கறியை வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.