புதுச்சேரி

ரஃபேல் விமான பேர ஊழலை மக்களிடம் விளக்க வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர்

DIN

ரஃபேல் போர் விமான பேர ஊழல் குறித்து பொதுமக்களிடம் காங்கிரஸார் விளக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் கேஷவ் சந்த் யாதவ் வலியுறுத்தினார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அவர் பேசியதாவது:
எதிர் வரும் மக்களவைத் தேர்தலில ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும்.  ரஃபேல் போர் விமானம்  கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 
 பெரு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு சாமானிய மக்களை மோடி வஞ்சித்துவிட்டார்.
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 66 டாலாக இருந்தும் ஏன் இந்த அரசு பெட்ரோலை ரூ. 86-க்கு விற்று மக்களை துன்பத்துக்கு ஆளாக்கி வருகிறது?
பாஜக அரசை வருகிற மக்களவைத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதற்காக காங்கிரஸார் அயராது உழைக்க வேண்டும். நாட்டு  மக்களுக்குத் தொல்லை கொடுக்க மத்தியில் நரேந்திர மோடி இருக்கிறார். அதேபோல, புதுவை மாநில மக்களுக்குத் தொல்லை கொடுக்க கிரண் பேடி உள்ளார் என்றார் அவர்.
விழாவில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீனிவாஸ், பொதுச் செயலர் ஜெபி மேத்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். புதுவை அமைச்சர் கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி.நாராயணன், அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி,  தனவேலு,  விஜயவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, புதுவை மாநில எல்லைப் பகுதியான கோரிமேட்டிலிருந்து காமராஜர் சாலை,  அண்ணா சாலை வழியாக கம்பன் கலையரங்குக்கு இரு சக்கர வாகனத்தில் புதிய நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT