புதுச்சேரி

தில்லி பெண்ணிடம் வழிப்பறி

DIN

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் நடந்து சென்ற தில்லி பெண்ணிடம் கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தில்லியைச் சேர்ந்தவர் பத்மஸ்ரீ கலாத்துர் (51). இவர் தனது உறவினர்களை பார்ப்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி வந்தார். முத்தியால்பேட்டையில் ஒரு விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், கடந்த 11 ஆம் தேதி 
ஆம்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், கலாத்துரின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 
அதில், விலை உயர்ந்த செல்லிடப்பேசி, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT