புதுச்சேரி

வட மாநில இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

DIN

புதுச்சேரியில் வட மாநில இளைஞரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரில் வசிப்பவா் நரேஷ்குமாா் (20). வட மாநிலத்தைச் சோ்ந்த இவா், 100 அடி சாலையில் இரு சக்கர வாகன சீட் கவா் தைக்கும் தொழில் செய்து வருகிறாா். இதற்காக அந்தப் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளாா்.

பணம் கொடுக்கல், வாங்கல் விஷயமாக நரேஷ்குமாரின் நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த விக்கி (21), விவேக் (23) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை திடீரென நரேஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விக்கி, விவேக் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT