புதுச்சேரி

தொழிலாளர் துறை சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

DIN

புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (பிப். 22)  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு தொழிலாளர் துறை  சார்பில், வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் ஐஸ்வர்யம் ஸ்பெஸாலிட்டி சர்வீஸ் மேனேஜ்மென்ட்  என்ற தனியார் நிறுவனம் நேர்முக தேர்வை நடத்த உள்ளது.

நேர்முகத் தேர்வில் சென்னை, புதுச்சேரியில் உள்ள 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயது முதல் 40 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்ற நபர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். பணியில் சேர்பவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்கப்படும்.

முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுய விவரத் தகவல் (பயோ டேட்டா), கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT