புதுச்சேரி

பள்ளி மாணவர் தூக்கிட்டு சாவு

DIN

புதுச்சேரியில் பள்ளி மாணவர் தூக்கிட்டு இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகர், இளங்கோ தெருவைச் சேர்ந்த சேகரன் மகன் விஷ்ணு (16). நகரப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் 2 பாடங்களில் மாணவர் விஷ்ணு தோல்வியடைந்த நிலையில், சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, விஷ்ணு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  இது குறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT