புதுச்சேரி

உரிய நேரத்தில் என்.ஆர்.காங். வேட்பாளர்கள் அறிவிப்பு: என்.ரங்கசாமி தகவல்

DIN

புதுவை மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என்று புதுவை சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் களமிறங்குகிறது. இதையடுத்து,  புதுச்சேரியில் உள்ள அதிமுக,  பாமக , பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளை என்.ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். 
ஏற்கெனவே அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். பின்னர், பாஜக மாநில அலுவலகத்துக்குச் சென்று மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ.  மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.
புதுச்சேரியில் உள்ள கூட்டணி கட்சியான பாமக மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளை மரியாதை  நிமித்தமாக என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்து  ஆதரவு திரட்டினார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி தகுந்த நேரத்தில் மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்போம் என தெரிவித்தார்.
ஓம்சக்தி சேகருடன் சந்திப்பு: அதைத்தொடர்ந்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரை சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT