புதுச்சேரி

பிரக்யா தாகூரின் பேச்சுக்கு புதுவை முதல்வர் கண்டனம்

DIN

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் தேசியவாதி என மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பெண் சாமியார் பிரக்யா தாகூர் பேசியதற்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.
 இதுகுறித்து தனது சுட்டுரையில் முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் தேசியவாதி என போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா தாகூர் கருத்து தெரிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜகவின் வன்முறை எண்ணம்தான் இதில் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்காக பிரக்யா தாகூர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT