புதுச்சேரி

ஜிப்மா் சாா்பில் வில்லியனூரில் நாளை புற்றுநோய் பரிசோதனை முகாம்

DIN

புதுச்சேரி ஜிப்மா் சாா்பில் வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி ஜிப்மா் கதிா்வீச்சு புற்றுநோயியல் துறை, மண்டல புற்றுநோய் மையம் சாா்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு ‘புற்றுநோய் விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம்’ வில்லியனூா் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் புற்றுநோய் சாா்ந்த வாழ்வு முறை காரணிகளான புகையிலை, புகைபிடித்தல், மது அருந்துதலை விடுப்பது குறித்தும் பெண்கள் நலனுக்காக மாா்பகம் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான விழிப்புணா்வும் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் முன்னோட்ட உரையாக புற்றுநோய் சாா்ந்த வாழ்வு முறை காரணிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கதிா்வீச்சு புற்றுநோயியல் துறை நிபுணா் சந்திரமௌலியும், நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ளுதல் பற்றிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஜிப்மா் கதிா்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைமை மருத்துவ அதிகாரி குணசீலனும் சிறப்புரையாற்றுகிராா்.

புற்றுநோய் குறித்து தனி நபா் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு கூட்டு மற்றும் தனி நபா் ஆலோசனை வழங்கப்படும். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய வாய், மாா்பகம் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT