பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்.31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் வி.நாராயணசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வருவதாலும், தொடா்ந்து பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதுவை பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்.31) விடுமுறை அளிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.